Pagetamil
இலங்கை

ஹம்பாந்தோட்டை மேயர் பதவிவிலகினார்!

ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்னாண்டோ மேயர் பதவியில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார்.

இன்று காலை ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் கூட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது, ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் தலைவர் பதவியில் இருந்தும் விலகுவதாக எராஜ் பெர்னாண்டோ தெரிவித்தார்.

தனது முடிவை அறிவித்த பெர்னாண்டோ, தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவிகளை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.

2014 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியைச் ​சேர்ந்த குழுவொன்று, மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை பார்வையிட சென்றிருந்த வேளையில், ஏராஜ் பெர்னாண்டோ கைத்துப்பாக்கியை காண்பித்து அக்குழுவினர் அச்சுறுத்தியிருந்தார்.

அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, தான் ஏந்திவந்தது கைத்துப்பாக்கி அல்ல, விளையாட்டுத் துப்பாகியென அவர் தெரிவித்திருந்தார்.

இதையும் படியுங்கள்

வடக்கு அரச உத்தியோகத்தர்களின் கவனத்துக்கு: அலுவலகம் போகும்போது இடைநடுவில் நிற்கும் அபாயத்தை தவிர்க்க!

Pagetamil

நல்லூர் கந்தன் வடக்கு நுழைவாயில் வீதி வளைவுக்கு அடிக்கல்

Pagetamil

ஆற்றங்கரையோரம் ஒய்யாரமாக தூங்கும் யானைகள்

Pagetamil

பலாலி- வசாவிளான் வீதி கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டதால் நாமலுக்கு வந்த கவலை!

Pagetamil

‘எங்கள் ஆட்கள் யாராவது இராணுவத்துடன் சேர்ந்து இயங்கியதை நிரூபிக்க முடியுமா?’: கருணா விடும் புது ‘கப்சா’!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!