சீனாவில் COVID-19 பரவலை கட்டுப்படுத்த அமுல்ப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்தினால் ஆண்டுக்கு 2 மில்லியன் பேர் வரை தொற்றினால் இறக்கக்கூடும் என்று சீன ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
சீனாவில் எந்தவிதமான COVID-19 தொற்றும் ஏற்படக்கூடாது என்ற ‘சீரேர் கொள்கையை உலக அளவில் பலரும் குறைகூறியுள்ளனர்.
இருப்பினும் சீன அறிவியல் ஆய்வாளர்களும் பொதுச் சுகாதார நிபுணர்களும் கடுமையான கட்டுப்பாடுகளைக் கட்டிக்காப்பது முக்கியம் என்று வலியுறுத்துகின்றனர்.
அவ்வாறு செய்யாவிடில் தொற்று ஏற்படும் அபாயம் அதிகமாகும் என்றும் அதிவேகத்தில் பரவக்கூடிய ஓமைக்ரோன் வைரஸ் நிலைமையை மோசமாக்கும் என்றும் அவர்கள் எச்சரித்திருக்கின்றனர்.
வைரஸ் பரவலுக்கு முந்திய காலத்தில் இருக்கும் வழக்கநிலைக்கு சீனா மாறினால் அங்கு வைரஸ் பரவாத இடங்களிலும் சுமார் 234 மில்லியனுக்கும் அதிகமான தொற்றுச் சம்பவங்கள் பதிவாகலாம் என்று ஆய்வாளர்கள் ஊகித்துள்ளனர்.
அதனால் 2 மில்லியன் பேர் இறக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
அதற்கு மாறாக தொடர்ந்து புதிய தடுப்புமருந்துகளை உருவாக்கி அதன்மூலம் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்குவது சிறந்த திட்டம் என்று சீன ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.




