பொது சுகாதார பரிசோதகர் ஆ.ஜென்சன் றொனால்ட் எழுதிய “என் சுவாசமே” சுகாதார மேம்பாட்டு ஏடு நேற்று மாலை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பிருந்திகா செந்தூரன் தலைமையில் பருத்தித்துறை SS COMPLEX இல் இடம்பெற்ற நூல்வெளியீட்டு நிகழவில் வெளியிடப்பட்டது.
பிரதம விருந்தினராக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரனும் சிறப்பு விருந்தினராக கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் க.செந்தூரனும், கௌரவ விருந்தினராக பருத்தித்துறை ஆதார வைத்தியசால பதில் மருத்துவ அத்தியட்சகர் வைத்தியர் வி.கமலநாதனும் கலந்து சிறப்பித்தனர்.
முதற்பிரதியை பருத்தித்துறை கொமர்சல் வங்கியின் முகாமையாளர் சார்பாக வங்கி உத்தியோகத்தர் சார்பாக வங்கி உத்தியோகத்தர் திருமதி தமயந்தி பெற்றுக்கொண்டார்.




