அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தின் மீதான ஒத்திவைப்பு வேளை விவாதத்தை நாளை மூன்றாவது நாளாக தொடர்வதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த ஒத்திவைப்பு வேளை விவாதம் நாளை காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை அரசாங்க மற்றும் எதிர்க்கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் நடைபெறும் என பாராளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.
நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட கொள்கை அறிக்கை மீதான விவாதம் நேற்று ஆரம்பமாகி இன்றும் இடம்பெற்று வருகின்றது.



