27.6 C
Jaffna
March 2, 2025
Pagetamil
உலகம்

அமெரிக்காவில் யூத ஆலயத்தில் பிணைக்கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டவர்கள் பாதுகாப்பாக விடுவிப்பு!

அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்திலுள்ள யூத ஆலயத்தில் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த அனைவரும் பாதுகாப்பாய் விடுவிக்கப்பட்டுள்ளதாக மாநில ஆளுநர் கிரெக் அபொட் அறிவித்துள்ளார்.

பயங்கரவாதக் குற்றத்துக்காகச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி ஒருவரின் விடுதலையைக் கோரி ஆலயத்துக்கு வந்த சிலரை, ஆப்கான் பின்னணியுடைய ஒருவர் பிணைக் கைதிகளாக பிடித்தார்.

உள்ளூர் நேரப்படி நேற்று முற்பகல் 11.30 மணி அளவில் வழிபாட்டுச் சேவையின்போது சம்பவம் நேர்ந்தது.

பிணையாளி, யூத மத குருவோடு மேலும் மூன்று நபர்களைப் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தார்.

காவல்துறையின் மீட்பு நடவடிக்கையின்போது பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த சந்தேகநபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பாக்கிஸ்தானைச் சேர்ந்த விஞ்ஞானியான ஆஃபியா சித்திக்கீயை டெக்சஸ் மத்திய சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என்பதே, பிணைக்கைதிகளை தடுத்து வைத்திருந்தவரின் கோரிக்கை.

ஆப்கானிஸ்தானில், அமெரிக்க அதிகாரிகளைக் கொலை செய்ய முயன்றதற்காக 2010ஆம் ஆண்டு சித்திக்கீக்கு 86 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

இரண்டாம் கட்ட போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் அழைப்பு

Pagetamil

இனி அமெரிக்க இராணுவத்தில் மாற்றுப் பாலினருக்கு இடமில்லை

Pagetamil

திருமணம் இல்லையா? வேலையும் இல்லை! – புதிய சட்டம்

Pagetamil

பாப்பரசர் பிரான்சிஸின் உடல் நிலை சிறிய முன்னேற்றம்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!