அம்பாறை, எக்கலோயா பகுதியில் டிப்பர் வாகனம் ஒன்று காருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மாலை (16) இந்த விபத்து நடந்தது.
விபத்தின் போது, தமணவிலிருந்து சியம்பலாண்டுவ நோக்கிச் சென்ற டிப்பர் வாகனமும், சியம்பலாண்டுவவிலிருந்து வந்த காரும் நேருக்குநேர் மோதி விபத்திற்குள்ளாகின.
காயமடைந்தவர்கள் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த இருவரது சடலங்களும் தற்போது அம்பாறை பொது வைத்தியசாலையிலும் ஒருவரின் சடலம் பிராந்திய வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த ஏனைய ஐவரும் அம்பாறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1