29.8 C
Jaffna
March 29, 2024
கிழக்கு

வாகரையில் ஆதிவாசிகளின் பாரம்பரிய பொங்கல் விழா!

ஆதிவாசிகளின் பொங்கல் விழா இன்று வாகரை குஞ்சங்கல் குளத்தில் அவர்களுக்குரிய கலாச்சார நிகழ்வுகளுடன் நடைபெற்றது.

ஆதிவாசிகளின் தலைவர் நல்லதம்பி வேலாயுதம் தலைமையில் இந்த நிகழ்வுவு நடைபெற்றது.

இதன்போது சிறுவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான மரபு ரீதியான விளையாட்டு நிகழ்வுகளும், வெற்றி பெற்வர்களுக்கு பரிசுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வினை லவன் உதவும் கரங்கள் நற்பணி மன்றத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந் நிகழ்வில் கலந்து கொண்ட அமைப்பின் தலைவர் குருசுமுத்து வி.லவன் உரையாற்றும் போது- ஆதிவாசிகள் எமது இனத்தின் மூத்த தமிழ் குடிமக்களாகும். இப் பகுதிகளில் இருந்து 3000 வருடங்களுக்கு முன்பு மன்னர் காலத்தின் அரச படைகளில் போர் வீராகளாக இருந்துள்ளனர். அப்போது அவர்களுக்கு கிடைத்த பரிசுப் பொருட்களை அவர்களின் மரணத்திற்கு பின்னர் மரணித்த போர் வீரர்களது உடலுடன் முதுமக்கள் தாழிகளாகவும், நடு கற்கள் பண்பாடுகளாகவும் இன்று கூறப்படும் தொல் பொருட்களாகவும் இறுதி எச்சங்களாகும் இன்று கானப்படுகிறது.

எனவே இவர்கள் எம்மவர்களால் போற்றப்பட வேண்டும். இவர்களது காலச்சாரங்களும் பண்பாடுகளும் எம்மால் பாதுகாக்கப்படவேண்டும் என்றார்.

-ருத்திரன்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்முனை அநீதிக்கு எதிராக 5வது நாளாக போராட்டம்!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

மருதமுனை மதரஸாவில் கொடூரம்!

Pagetamil

கல்முனையில் தமிழர்களுக்கு எதிரான அநீதி: மீண்டும் வெடித்தது போராட்டம்!

Pagetamil

ஆற்றில் குதித்த திருடன்: ட்ரோன் உதவியுடன் தேடுதல்!

Pagetamil

Leave a Comment