30.9 C
Jaffna
April 20, 2024
கிழக்கு

மட்டக்களப்பில் கடலில் மூழ்கி காணாமல் போன மாணவர்களின் சடலங்கள் மீட்பு!

மட்டக்களப்பு கிரான் நாகவத்தை கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்று கடலில் மூழ்கிய இரண்டு மாணவர்களின் சடலங்களும் இன்று மாலை மீட்கப்பட்டுள்ளன.

கிரானைச் சேர்ந்த ச.அக்சயன் மற்றும் ஜீ.சிவானந்தன் ஆகிய பதினாறு வயதுடைய மாணவர்களே இன்று மாலை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்கள்.

இருவரது சடலங்களும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் உடற் கூற்றாய்விற்காக வைக்கப்பட்டுள்ளது.

பொங்கல் தினமன்று கிரான் தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் சிலர் ஒன்றாகச் சேர்ந்து கடலில் குளித்துக் கொண்டிருந்த வேளை கடல் அலையினால் மூவர் இழுத்துச் செல்லப்பட்டனர். இதன்போது ஒருவர் உடனடியாக காப்பாற்றப்பட்டார். இருவர் காணமல் போயிருந்தனர். அவர்களின் சடலங்களே இன்று மீட்கப்பட்டன.

-க.ருத்திரன் –

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

புலிகள் கடத்தல்காரர்கள்: உலமா கட்சி தலைவர் உளறல்!

Pagetamil

24வது நாளாக கல்முனை மக்கள் போராட்டம்!

Pagetamil

சாய்ந்தமருது மாலை நேர கடைகளில் சோதனை : டேஸ்ட் கடைகளில் புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்ட சுவையூட்டிகள் கூட கண்டுபிடிப்பு!

Pagetamil

சாய்ந்தமருது, பாண்டிருப்பு, மருதமுனை பிரதேசங்களில் இயங்கிய போலி மருத்துவ நிலையம் சுற்றிவளைப்பில் சிக்கியது

Pagetamil

14 வயது சிறுமியை கடத்திய 17 வயது காதலன் கைது!

Pagetamil

Leave a Comment