சிறார்களிற்கு தடுப்பூசி செலுத்த தயங்காதீர்கள்!

Date:

12 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைளுக்கு கொவிட் தடுப்பூசியை வழங்குவதற்கு பெற்றோர்கள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த, 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் உட்பட, நாட்டின் மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர், கோவிட்-க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட வேண்டும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம் வழங்கிய பரிந்துரைகள் மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவில் உள்ள வல்லுநர்கள் நடத்திய பல ஆய்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடுவது தொடர்பாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆறு மாதங்களுக்கு முன்பே தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதாக, அந்த சங்கத்தின் செயலாளர் டொக்டர் செனல் பெர்னாண்டோ கூறினார்.

பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடுவதன் மூலம் COVID-19 பரவுவதைத் தடுக்க முடியும் என்று குறிப்பிட்ட அவர், 70 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் இந்த நோக்கத்திற்காக தடுப்பூசி போட வேண்டும்.

இதேவேளை, தடுப்பூசிக்காக பல்வேறு சிக்கல்கள் உள்ள குழந்தைகளை பரிந்துரைக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் குறித்து கருத்து தெரிவித்த வைத்தியர் செனல் பெர்னாண்டோ, தடுப்பூசி மருத்துவரின் மேற்பார்வையின் கீழ் வைத்தியசாலையில் செலுத்தப்பட வேண்டும் என்றார்.

பாடசாலைகளில் தடுப்பூசி போடும் செயல்முறையானது, சுகாதார மருத்துவ அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நாயுடன் உறவு விவகாரம்: வருத்தம் தெரிவித்த ஹிருணிகா

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமச்சந்திர, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்...

யுத்த வெற்றியினால் தமிழர்களிற்கே அதிக நன்மையாம்: சொல்கிறார் அருண் சித்தார்த்தின் தலைவர்!

யுத்த வெற்றியின் மூலம் அதிகளவிலான நன்மைகளை தமிழ் மக்களே பெற்றுள்ளதாக திலித்...

இன்று ஈரானை தாக்கவிருந்தபோதும் அயல் நாடுகளின் கோரிக்கையால் கைவிட்டுள்ளோம்: ட்ரம்ப்

சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்