மின்வெட்டு பற்றி ஆளாளுக்கு அறிவிப்பு விடுக்காமல் தெளிவான அறிவித்தல் தாருங்கள்!

Date:

திட்டமிடப்பட்ட மின்வெட்டு விதிக்கப்படுமா இல்லையா என்பது குறித்து அரசாங்கமும் மின்சக்தி அமைச்சரும் பொதுமக்களுக்கு நாள்தோறும் தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சி கூறுகிறது.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, 2022 இல் இந்தியாவிற்கும் மின்சாரம் வழங்குவதாக தற்போதைய நிர்வாகம் கூறுவதாக தெரிவித்தார்.

எவ்வாறாயினும், நாட்டில் தினசரி மின்வெட்டுகளை அமுல்படுத்துவதற்கு தற்போது அனுமதி கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.

மின்வெட்டு தொடர்பில் அரசாங்கம் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜகருணா தெரிவித்துள்ளார்.

மின்வெட்டு தேவையில்லை என அமைச்சர் கூறி வரும் நிலையில், தினசரி மின்வெட்டுக்கான அட்டவணையை பொது மேலாளர் அறிவித்துள்ளார்.

மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என காலை வேளையில் அறிவிப்புகள் வெளியாகும் அதே வேளையில் பிற்பகல் வேளையில் பல்வேறு காரணங்களுக்காக மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அதே அதிகாரிகளும் ஊடகங்களும் அறிவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா குறிப்பிட்டார்.

தற்போதைய மோசமான பொருளாதார நிலைமை காரணமாக அரசாங்கம் மின்வெட்டை மூலோபாயமாக விதிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

அண்மையில் எரிவாயு கசிவு காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.

லிட்ரோ நிறுவனம் அரசுக்கு சொந்தமான நிறுவனம் என்பதால், சமீபத்திய வெடிப்பு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் இழப்பீடு வழங்கவும் அதன் தலைவர் மற்றும் இயக்குநர்கள் குழுவிற்கு அரசாங்கம் அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்றார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்த போதிலும், சிஐடி இதுவரை லிட்ரோ தலைவரையோ அல்லது அதன் குழுவையோ விசாரிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்தச் சம்பவங்களின் பின்னணியில் பெரும் சக்திகள் இருப்பதாகவும், எனவே சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகள் கூட சம்பவங்கள் தொடர்பில் எந்த முன்னேற்றத்தையும் மேற்கொள்ளவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவ பாதுகாப்பு மோட்டார்சைக்கிள் இராணுவ ரோந்து நடவடிக்கையடுத்து – பரபரப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிசார் இணைந்து...

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு : போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த மாடுகளுக்கு எதிராக பிரதேச சபை – பொலிஸார் இணைந்து நடவடிக்கை

பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்து, தொடர்ச்சியாக வீதி விபத்துகளுக்கும் விவசாயப் பயிர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்