ஏற்கனவே 10 வழக்குகள்… யாழ்ப்பாணத்தின் பயங்கர ரௌடி கைது!

Date:

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஆவா குழுவை சேர்ந்த ரௌடி ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மானிப்பாயை சேர்ந்த 26 வயதுடைய கொலின் என்ற ரௌடியே கைதாகினார்.

கடந்த நவம்பர் 23 ஆம் திகதி அதிகாலை தாவடியிலுள்ள வீடொன்றிற்குள் புகுந்து, வீட்டு யன்னல்களை அடித்துடைத்ததுடன், மோட்டார் சைக்கிளொன்றை உருட்டி வந்து, தாவடி பகுதியில் வீதியில் போட்டு, அடித்துடைத்திருந்தனர்.

அதேகும்பல், ஆனைக்கோட்டைக்கு சென்று, 48 வயதான ஒருவரை வாளால் வெட்டினர்.

சிறிய நேர இடைவெளியில் இரண்டு சம்பவங்களும் நடந்தன.

சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் மானிப்பாய் புதுமடத்தைச் சேர்ந்த ரௌடி கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிராக நீதிமன்றங்களில் பத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர...

இங்கினியாகலையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது : அம்பாறை பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் பிரதான விநியோகஸ்தரும் சிக்கினார்

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் நோக்கில் அம்பாறை பிரதி பொலிஸ்மா...

நிந்தவூரில் வாழ்வாதார மேம்பாட்டு தேவையுடைய குடும்பங்களுக்கு தையல் மெஷின் வழங்கும் நிகழ்வு

நிந்தவூரில் இயங்கிவரும் Best of Young சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்