யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஆவா குழுவை சேர்ந்த ரௌடி ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மானிப்பாயை சேர்ந்த 26 வயதுடைய கொலின் என்ற ரௌடியே கைதாகினார்.
கடந்த நவம்பர் 23 ஆம் திகதி அதிகாலை தாவடியிலுள்ள வீடொன்றிற்குள் புகுந்து, வீட்டு யன்னல்களை அடித்துடைத்ததுடன், மோட்டார் சைக்கிளொன்றை உருட்டி வந்து, தாவடி பகுதியில் வீதியில் போட்டு, அடித்துடைத்திருந்தனர்.
அதேகும்பல், ஆனைக்கோட்டைக்கு சென்று, 48 வயதான ஒருவரை வாளால் வெட்டினர்.
சிறிய நேர இடைவெளியில் இரண்டு சம்பவங்களும் நடந்தன.
சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் மானிப்பாய் புதுமடத்தைச் சேர்ந்த ரௌடி கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிராக நீதிமன்றங்களில் பத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.




