Pagetamil
உலகம்

பங்களாதேஷில் ரோஹிங்கியா அகதி முகாமில் பெரும் தீ விபத்து: 1,200 குடியிருப்புக்கள் அழிந்தன!

பங்களாதேஷில் ரோஹிங்கியா அகதிகள் முகாமின் ஒரு பகுதியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில், சுமார் 1,200 குடிசைகள் எரிந்தழிந்துள்ளன. ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள் குடியிருப்பை இழந்தனர்.

காக்ஸ் பஜாரின் உக்கியாவில் உள்ள அகதிகள் முகாமிலேயே தீ விபத்து ஏற்பட்டது.

மூங்கில், தார் பூசிய கித்தான் துணி போன்றவற்றால் அமைக்கப்பட்ட முகாமின் பகுதிகளில் தீ மிக விரைவில் பரவியது.

இருப்பினும் சுமார் 2 மணி நேரத்துக்குள் முகாமில் பரவிய தீ கட்டுப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

எரிவாயு சிலிண்டர் வெடித்ததை தொடர்ந்து இந்த அனர்த்தம் நிகழ்ந்தது. வீடுகள், பாடசாலைகள், மருத்துவ மையங்கள் அழிந்துள்ளன.

மியன்மாரிலிருந்து தப்பி வந்த ரோஹிங்கியா இனத்தவர்கள், 2017ஆம் ஆண்டு முதல் காக்ஸ் பஜாரில் உள்ள அகதி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்கு சுமார் 850,000 ரோஹிங்கியாக்கள் தங்கியிருக்கின்றனர்.

பங்களாதேஷிலுள்ள வசதியற்ற ரோஹிங்கியா அகதி முகாம்களில் அடிக்கடி தீவிபத்து நிகழ்வது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

இரண்டாம் கட்ட போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் அழைப்பு

Pagetamil

இனி அமெரிக்க இராணுவத்தில் மாற்றுப் பாலினருக்கு இடமில்லை

Pagetamil

திருமணம் இல்லையா? வேலையும் இல்லை! – புதிய சட்டம்

Pagetamil

பாப்பரசர் பிரான்சிஸின் உடல் நிலை சிறிய முன்னேற்றம்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!