ஏற்கனவே 10 வழக்குகள்… யாழ்ப்பாணத்தின் பயங்கர ரௌடி கைது!

Date:

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஆவா குழுவை சேர்ந்த ரௌடி ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மானிப்பாயை சேர்ந்த 26 வயதுடைய கொலின் என்ற ரௌடியே கைதாகினார்.

கடந்த நவம்பர் 23 ஆம் திகதி அதிகாலை தாவடியிலுள்ள வீடொன்றிற்குள் புகுந்து, வீட்டு யன்னல்களை அடித்துடைத்ததுடன், மோட்டார் சைக்கிளொன்றை உருட்டி வந்து, தாவடி பகுதியில் வீதியில் போட்டு, அடித்துடைத்திருந்தனர்.

அதேகும்பல், ஆனைக்கோட்டைக்கு சென்று, 48 வயதான ஒருவரை வாளால் வெட்டினர்.

சிறிய நேர இடைவெளியில் இரண்டு சம்பவங்களும் நடந்தன.

சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் மானிப்பாய் புதுமடத்தைச் சேர்ந்த ரௌடி கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிராக நீதிமன்றங்களில் பத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாண நகரில் இலங்கைப் படையினர் சோள வியாபாரம் – சொந்த நிலத்திற்கு செல்ல முடியாமல் வலி வடக்கு மக்கள் அவதி!

​யாழ்ப்பாண நகரில்  சோள வியாபார நடவடிக்கைகளில் இலங்கைப் படையினர் ஈடுபட்டு வருவதால்...

வலிகாமம் வடக்கு சபைக்கு நீதிமன்ற நிவாரணம்

தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதி விடுவிப்புக்கு முயற்சித்த வலிகாமம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்