29.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
இந்தியா

மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

அந்தியூரில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் வனத்துறை அலுவலகம் அருகே உள்ள தனியார் பயிற்சி கல்வி நிலையத்தில் ஆசிரியராக லோகநாதன் (38) என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.

இவர் அந்தியூர் பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பில் தோல்வியுற்ற 16 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, கடந்த டிசம்பர் 4ஆம் திகதி பவானி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நடத்திய விசாரணையில், மாணவி 3 மாத கர்ப்பிணியாக இருந்ததையடுத்து, போலீசார் லோகநாதனை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட லோகநாதனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என காவல்துறையினர் பரிந்துரை செய்தனர்.

இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி உத்தரவின் பேரில் லோகநாதனை குண்டர் சட்டத்தில் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கவிஞர் நந்தலாலா காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

Pagetamil

விஜயலட்சுமியுடன் சமரசம் செய்ய அவகாசம்: சீமான் மீதான பாலியல் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

Pagetamil

தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி தொடர் உணவுத்தவிர்ப்பு போராட்டம்

Pagetamil

மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் 9ம் வகுப்பு மாணவன் பலி

Pagetamil

சம்மன் கிழிப்பு முதல் காவலாளி கைது வரை: சீமான் வீட்டில் நடந்தது என்ன?

Pagetamil

Leave a Comment