உணவகங்களில் பால் தேனீர் விற்பனையை நிறுத்த முடிவு!

Date:

உணவகங்களில் வாடிக்கையாளர்களுக்கு பால் தேநீர் வழங்குவதை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத், பால்மாவின் விலை அதிகரிப்பால் பால் தேநீரின் விலையை மேலும் அதிகரிக்க முடியாது என்பதனால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

பால் மா பொதி ஒன்றின் விலை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், பால் மா நிறுவனங்களால் ஒரு கிலோ பால் மாவின் விலையை 1345 ரூபாவாக அதிகரிக்க முடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பால் மா நிறுவனங்களுக்கு அவர்கள் விரும்பியதைச் செய்வதற்கு அரசாங்கம் அனுமதியளித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலைமை காரணமாக சுமார் 3000 உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

டுபாயிலிருந்து ‘தூக்கிவரப்பட்ட’ கொடூரன்: வெடிகொளுத்தி கொண்டாடிய ஊர் மக்கள்!

டுபாயிலிருந்து தனது அடியாட்கள் மற்றும் கூலிப்படையினரைப் பயன்படுத்தி கொலைகள் மற்றும் மிரட்டிப்...

7 நடிகைகள், 9 அரசியல்வாதிகள், 13 சிறை உத்தியோகத்தர்களின் தரவுகள்: கெஹல்பத்தர பத்மேவின் தொலைபேசியில் வெளிப்பட்ட தகவல்கள்!

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில்...

சிரியா மீதான கடைசித்தடையையும் நீக்கியது அமெரிக்கா

திங்களன்று, அமெரிக்கா தனது பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் (SST) பட்டியலில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்