ஃபைசர் கொரோனா மாத்திரைக்கு அமெரிக்கா அனுமதி!

Date:

அமெரிக்க சுகாதார கட்டுப்பாட்டாளர்கள், கோவிட்-19க்கு எதிரான முதல் வாய்வழி மாத்திரையை அங்கீகரித்துள்ளனர்.  ஃபைசர் நிறுவத்தின் மாத்திரைக்கே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் மோசமான விளைவுகளைத் தடுக்க பயனர்கள் வீட்டிலேயே இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ள முடியும்.

அந்த முடிவைப் பாராட்டிய ஜனாதிபதி ஜோ பைடன், இந்த மாத்திரை, நோயாளிகள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதையும் மரணங்களையும் குறைக்க உதவும் என்றார்.

அடுத்த மாதம் 250,000 முறை உட்கொள்வதற்குத் தேவையான மாத்திரைகள் பெறப்படும் என்று பைடன் தெரிவித்துள்ளார்.

ஃபைசர் மாத்திரைக்கு அனுமதியளிக்கும் முடிவை, நேற்று புதன்கிழமை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம்அறிவித்தது.

ஃபைசரின் மருத்துவ பரிசோதனையின் தரவு, கடுமையான நோயின் அதிக ஆபத்தில் உள்ள நோயாளிகளை மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் மற்றும் இறப்புகளைத் தடுப்பதில்  90 சதவீதம் பயனுள்ளதாக இருந்தது என்பதைக் காட்டுகிறது. சமீபத்திய ஆய்வகத் தரவு, ஒமைக்ரோனிற்கு எதிராக மருந்து அதன் செயல்திறனைத் தக்கவைத்துக்கொள்வதாகக் கூறுகிறது.

spot_imgspot_img

More like this
Related

மனைவியுடன் சண்டையிட்டு விபரீத முடிவெடுக்கும் இலங்கை ஆண்களுக்கு எச்சரிக்கை சம்பவம்!

மனைவியுடனான குடும்பத் தகராறு காரணமாக கம்புருபிட்டிய பகுதியில் உயர் அழுத்த மின்...

பொன்சேகா மீதான தற்கொலை தாக்குதல்: 17 வருடங்களின் பின் சந்தேகநபர்களுக்கு பிணை!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்யும் நோக்கத்தில், விடுதலைப்...

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு – பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் அறிவிப்பு

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக பிரேசில் அணியின் நட்சத்திர வீரர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்