27.9 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மாலிம்பட, அப்பரெக்க பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை மத்தளை நோக்கிச் சென்ற லொறி ஒன்று, வீதியில் நிறுத்தப்பட்டிருந்தது.

அதே திசையில் சென்ற எரிபொருள் பவுசர், லொறி மீது மோதியது.

லொறி சாரதியின் உதவியாளரான 72 வயதானவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், பௌசரின் சாரதி மற்றும் உதவியாளர் படுகாயமடைந்து மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், 61 வயதான பவுசரின் சாரதி காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார்.

இருவரும் கடவத்தை மற்றும் கொனவல பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மோட்டார் சைக்கிள் விபத்தில் இராணு லான்ஸ் கோப்ரல் பலி

east tamil

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

east tamil

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர் கைது

east tamil

ரூ.11,000 இலஞ்சம் வாங்கிய தபால ஊழியருக்கு 28 வருட சிறை!

Pagetamil

காய்கறிகளின் விலை அதிகரிப்பு

east tamil

Leave a Comment