இந்திய முப்படை தளபதி பயணித்த ஹெலிகொப்டர் வீழ்ந்து நொறுங்கியது!

Date:

இந்திய முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பயணித்த இராணுவ ஹெலிகாகொப்டர்  தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம், குன்னூரில் விழுந்து நொறுங்கியுள்ளது.

தற்போது வரை நான்கு பேர் இறந்துள்ளமை உறுதியாகியுள்ளது. இருவர் உயிர் பிழைத்துள்ளனர்.

“சிடிஎஸ் ஜெனரல் பிபின் ராவத் பயணித்த IAF Mi-17V5 ஹெலிகாப்டர், தமிழகத்தின் குன்னூர் அருகே இன்று விபத்துக்குள்ளானது. விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று இந்திய விமானப்படை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

80 சதவீதம் தீக்காயங்களுடன் இரண்டு உடல்கள் உள்ளூர் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது. விபத்து நடந்த பகுதியில் சில உடல்கள் கீழே காணப்படுகின்றன. உடல்களை மீட்கவும், அடையாளங்களைச் சரிபார்க்கவும் முயற்சிகள் நடந்து வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

யுவதிக்கு பாலியல் தொந்தரவு – இராணுவ கப்டன் கைது

யாழ்ப்பாணத்தில் ஓடும் பேருந்திற்குள் யுவதியொருவருடன் அங்க சேட்டை புரிந்த குற்றச்சாட்டில் , இராணுவ கப்டன்...

சம்மாந்துறை ஸதகா நலன்புரி நிதியத்தின் இணையத்தளம் அங்குரார்ப்பணம்

சம்மாந்துறை ஸதகா நலன்புரி நிதியத்தின் இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வு புதன்கிழமை சம்மாந்துறை...

எரிபொருள் விலையில் நிவாரணம்? உலக எண்ணெய் விலை சரிவால் அரசின் முக்கிய அறிவிப்பு

உலக சந்தையில் எண்ணெய் விலை சரிவு: விரைவில் எரிபொருள் விலை நிவாரணம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்