மட்டக்களப்பில் ஆசிரியர்கள் வீதியில் நிறுத்தப்பட்ட சம்பவத்தில் நடவடிக்கை வேண்டும்!

Date:

மட்டக்களப்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக நடைபெற்ற அசம்பாவிதம் தொடர்பாக தாம் அதிருப்தி அடைவதாக இலங்கை அரச ஆசிரியர் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

இன்று (07) இலங்கை அரச ஆசிரியர் சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பொன்று திருகோணமலை ஊடக இல்லத்தில் நடைபெற்றது.

இதன்போது குறித்த சங்கத்தின் வடக்கு கிழக்கு மாகாண செயலாளர் ஜீவராஜா ருபேசன் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

பாடசாலையின் பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சிலர் குறித்த பாடசாலையில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது குறித்த ஆசிரியருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் அவருக்கு எதிராக விசாரணை முன்னெடுக்கப்பட்டு அந்த விசாரணையின்போது அவருடைய குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவர் பாடசாலையில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

ஒரு ஆசிரியரால் இளைக்கப்பட்ட தவறை சுட்டிக்காட்டி ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தை ஒரு சிலர் அரசியல் நோக்கத்திடற்க்காக குறித்த பாடசாலையின் அனைத்து ஆசிரியர்களையும் அன்றைய தினத்தில் வீதியில் நிறுத்தி வைத்திருந்தார்கள். அதனை தாம் வன்மையாக கண்டிப்பதாக இலங்கை அரச ஆசிரியர் சங்கத்தின் வடக்கு கிழக்கு மாகாண செயலாளர் ஜீவராஜா ருபேசன் தெரிவித்தார்.

மேலும் குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது ஆசிரியர்கள் சிலர் தாக்கப்பட்டதாகவும் அதில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இன்று வரை சிகிச்சை பெற்று வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

குறித்த ஒரு ஆசிரியருக்காக பாடசாலையின் பிரதான நுழைவாயிலை பிறிதொரு பூட்டினை கொண்டு பூட்டி அங்கு உட்செல்ல எவரையும் அனுமதிக்காது தடுத்தமை முற்றிலும் சட்டவிரோதமான ஒரு செயலாகும்.

கடந்த 24 வருட காலமாக தீர்த்து வைக்கப்படாமல் இருக்கின்ற சம்பள முரண்பாடு பிரச்சினை நிலவி வருகின்ற இக் காலப்பகுதியில் இவவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றது மிகவும் வருத்தத்திற்குரியது விடயம். இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவ்வாறு குறித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் நாம் மாபெரும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தயார் நிலையில் இருக்கிறோம்.

இவ்வாறு ஆசிரியர் சமூகத்தினை ஒரு அடிமைப்படுத்துகின்ற ஒரு சமுதாயமாக நடந்துகொள்வதாக சந்தேகம் ஏற்ப்படுவதாக கவலை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்-

spot_imgspot_img

More like this
Related

நாடாளுமன்ற உறுப்பினர் பி ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லாவுக்கு எதிராக ஈரோஸ் கட்சி தலைவர் இரா. பிரபாகரன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு–

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா கடந்த காலத்தில் ஓட்டமாவடி காளி கோவிலை...

சொந்த மகளை சீரழித்த தந்தைக்கு நீதிமன்றம் விதித்த தண்டனை

மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட காலக் கடூழிய...

செப்.1 முதல் புதிய படங்கள் வெளியாகாது: தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு

ஓடிடி ரிலீஸ் விவகாரம் வலுத்துள்ள நிலையில், செப்டம்பர் 1-ம் தேதி முதல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்