30.7 C
Jaffna
March 29, 2024
கிழக்கு

கல்முனை பிரதேச மக்களிற்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்!

கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் பராமரிப்பு வேலைகள் காரணமாக தற்காலிக மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய பிரதேச மின் பொறியலாளர் ஏ.எம்.ஹைக்கல் அறிவித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை (04) கல்முனை மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட கல்முனை வைத்தியசாலை வீதி தொடக்கம் தாளவெட்டுவான், பிறதர் ஹவூஸ் வீதி, மணல்சேனை, பாண்டிருப்பு, மருதமுனை, துரைவந்தியமேடு, பெரியநீலாவணை ,ஆகிய பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும் மின் தடைப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மேற்குறித்த பகுதிகளுக்கான வேலைகள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னர் நிறைவடைகின்ற போது உடனடியாக மின்சாரம் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

இதே வேளை தினசரி இரவு 6 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதிக்குள் நாட்டின் பல்வேறு இடங்களில் ஒரு மணி நேர மின்வெட்டு இடம்பெறலாமென மின்வலு அமைச்சு அறிவித்துள்ளது.

நுரைச்சோலை மின் நிலையத்தின் மின் விநியோக செயற்பாடுகள் சீரடையும்வரை இவ்வாறு ஒரு மணி நேர மின்வெட்டு அமுலில் இருக்குமென அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

-பா.டிலான்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்முனை அநீதிக்கு எதிராக 5வது நாளாக போராட்டம்!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

மருதமுனை மதரஸாவில் கொடூரம்!

Pagetamil

கல்முனையில் தமிழர்களுக்கு எதிரான அநீதி: மீண்டும் வெடித்தது போராட்டம்!

Pagetamil

ஆற்றில் குதித்த திருடன்: ட்ரோன் உதவியுடன் தேடுதல்!

Pagetamil

Leave a Comment