நீர்கொழும்பு பிரதான வீதியிலுள்ள உணவகம் ஒன்றின் பிரதான சமையல்காரர் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
உணவகத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்காக உணவகத்தின் நிர்வாகம் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
விருந்து முடிந்து நான்காவது மாடியில் உள்ள தனது அறைக்கு செல்ல முயன்ற போது, மாடிப்படியில் இருந்து தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளானவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் வெலிமட பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




