நேற்று 742 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 562,520 ஆக உயர்ந்துள்ளது.
அனைத்து தொற்றாளர்களும் புத்தாண்டு கோவிட்-19 கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
18,553 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று, COVID-19 இலிருந்து மீண்ட 422 பேர் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 529,662 ஆக உயர்ந்தது.
தொற்று சந்தேகத்தில் 1,946 பேர் தற்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
இதேவேளை, நேற்றைய தினம் மேலும் 27 கொரோனா வைரஸ் தொடர்பான மரணங்கள் இலங்கையில் உறுதிசெய்யப்பட்டதையடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,305 ஆக அதிகரித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1