கிளிநொச்சி நீதிமன்றத்தில் மாவீரர்நாள் தடைக்கு எதிரான மனு இன்று விசாரணை!

Date:

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 8 பொலிஸ் நிலையங்களால் பெறப்பட்ட மாவீரர்நாள் தடைக்கு எதிரான நீதிமன்ற கட்டளையை நீக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று (26) காலை இடம்பெறவுள்ளது.

இந்த வழக்கில் முன்னிலையாகி பதிலளிக்குமாறு 8 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளிற்கு மன்று கட்டளையிட்டுள்ளது.

கிளிநொச்சி, தர்மபுரம், பளை, பூநகரி, ஜெயபுரம், முழங்காவில், அக்கராயன் உள்ளிட்ட 8 பொலிஸ் நிலையங்களினால், 51 பேருக்கு எதிராக, மாவீரர்நாள் அனுட்டிப்பு தடைகோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கடந்த 19ஆம் திகதி கிளிநொச்சி நீதிமன்ற நீதிபதி லெனின்குமார், 51 பேருக்கும் தடையுத்தரவு பிறப்பித்தார்.

தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சி.சிறிதரன், செ.கஜேந்திரன், முன்னாள் எம்.பி எம்.கே.சிவாஜிலிங்கம், முன்னாள் வடமாகாணசபை அமைச்சர் குருகுலராஜா, கரைச்சி தவிசாளர் வேழமாலிகிதன் உள்ளிட்டவர்களிற்கே தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த தடையுத்தரவிற்கு எதிராக நேற்று (25) மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் விசாரணை இன்று இடம்பெறும்.

மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா தலைமையில் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் குழு சமர்ப்பணங்களை வழங்கும்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

யாழில் இருந்து தமிழகம் சென்றபோது நடுக்கடலில் பழுதான கப்பல்: 7 மணி நேரமாக 144 பயணிகள் தவிப்பு

காங்கேசன்துறை- தமிழகத்தின் நாகப்பட்டினம் இடையே இயக்​கப்​படும் கப்​பலின் இயந்திரம் பழு​தான​தால் நடுக்​கடலில்...

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் நாளை பதவியேற்பு!

ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையுடன் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை, தவெக...

யாழ் போதனா வைத்தியசாலை தீ விபத்து; பெருமளவு மருந்துகள் அழிவு… மின் ஒழுக்கு காரணம்?: யாழில் தீயணைப்பு வசதி இல்லாததை வெளிச்சமிட்ட சம்பவம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏற்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்