25.4 C
Jaffna
March 5, 2025
Pagetamil
உலகம் முக்கியச் செய்திகள்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் வரலாறு காணாத பெரு மழை: அவசர நிலை பிரகடனம்!

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் அண்மைய தசாப்பதங்களில் இல்லாத கனமழை பெய்து வருகிறது. கடலோர மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புதன்கிழமை நண்பகல் முதல் அங்கு அவசரநிலைமை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

லோயர் மெயின்லேண்டில் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கித் தவிக்கும் அல்லது அத்தியாவசிய சேவைகளிலிருந்து துண்டிக்கப்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. அவசரகால நிலை 14 நாட்களுக்கு நடைமுறையில் உள்ளது, தேவைப்பட்டால் அதை நீட்டிக்க வாய்ப்பு உள்ளது.

பிரதமரின் கூற்றுப்படி, பெரிய சாலை மூடல்கள் விநியோகச் சங்கிலியைத் தடுத்துள்ளதால், இந்த அறிவிப்பு அரசாங்கத்திற்கு சரக்குகளை நகர்த்துவதற்கு அதிக நெகிழ்வுத்தன்மையைக் கொடுக்கும்.

நிலச்சரிவில் பாதிப்படைந்தவர்களை தேடும் முயற்சியில் மீட்புக் குழு பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கனமழையால் இடுப்புவரை வெள்ளநீர் பாய்வதால் மீட்புக் குழுவினருக்கு பாதிக்கப்பட்டவர்களை தேடுவது மிகவும் கடினமாக உள்ளது.

நிலச்சரிவில் சிக்கியுள்ள கணக்கில் வராத மக்கள் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை தெளிவாக உறுதிப்படுத்தப்படவில்லை. வாகன ஓட்டிகள் பலர் மண்சரிவில் புதைந்து இருக்கலாமென்று கூறப்படுகிறது. மேலும் விசாரணை அதிகாரிகளிடம் இருவர் காணாமல் போயுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு கிட்டத்தட்ட 300 பேர் மீட்கப்பட்டு ஹெலிகொப்டர் மூலம் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக பிரிட்டிஷ் கொலம்பியாவின் பல்வேறு நெடுஞ்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

மீட்பு பணிக்காக விமானப்படையின் ஹெலிகொப்டர்களை அனுப்ப மத்திய அரசு அனுமதித்துள்ளது.

புயல், மழை, வெள்ளத்தால் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண அரசு தெரிவித்துள்ளது. மேலும் புயல், மழை, வெள்ள பாதிப்பு காரணமாக 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் சாத்தியமுள்ளதாக மாகாண பிரதமர் அச்சம் வெளியிட்டுள்ளார்.

மெரிட் மற்றும் பிரின்ஸ்டன் உள்ளிட்ட தெற்கு பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்படைந்துள்ளனர். நூற்றுக்கணக்கான குடும்பங்கள் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தின் தாக்கத்தினால் அடையும் துயரத்தை நினைத்து மிகவும் கவலைப்படுவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘இந்த ஆள் அமைதியை விரும்பவில்லை’: மீண்டும் ஜெலென்ஸ்கியை விமர்சித்த டிரம்ப்!

Pagetamil

ரஷ்யா மீதான தடைகளின் ஒரு பகுதியை தளர்த்தும் திட்டத்தை தயாரிக்கிறது அமெரிக்கா!

Pagetamil

3 கட்சிகளாக அல்ல; சங்கு கூட்டணியாக பேச்சு நடத்த தயார்: தமிழரசுக்கு பதில்!

Pagetamil

இன்று வழக்கம் போல எரிபொருள் விநியோகம்!

Pagetamil

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

Leave a Comment