Pagetamil
இலங்கை

10 நாட்களில் 1,361 டெங்கு நோயாளர்கள்: இலங்கையை மிரட்டும் அடுத்த ஆபத்து!

தொடரும் மழைக்காலத்தில் டெங்கு நோய்த்தாக்கம் மிக அதிகமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுவதால்  மக்கள் விழிப்புடன் இருக்குமாறு சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

நவம்பர் மாதத்தில் 10 நாட்களில் மட்டும் 1,361 டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முழுவதும் 770 டெங்கு நோயாளர்களே அடையாளம் காணப்பட்டனர். இருப்பினும், இந்த நவம்பரில் வெறும் 10 நாட்களுக்குள் 1,361 பேருக்கு டெங்கு நோய் ஏற்பட்டுள்ளது. இது இந்த ஆண்டு டெங்கு அபாயத்தை புலப்படுத்துகிறது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக வைத்தியர், விசேட வைத்திய நிபுணர் டொக்டர் ஷிலந்தி செனவிரத்ன, வெள்ள நிலைமைகளுடன் கொசுக்கள் உற்பத்தியாகும்  அதிக இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வெள்ளம் குறையத் தொடங்கும் போது ஆபத்து ஏற்படுகிறது. எனவே, இந்த நிலைமை குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்று  கூறினார்.

அவரது கூற்றுப்படி, கொழும்பு, மட்டக்களப்பு, பதுளை, கேகாலை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் கணிசமான எண்ணிக்கையிலான நோயாளிகள் கண்டறியப்படுகிறார்கள்.

இதற்கிடையில், டெங்குவைக் கட்டுப்படுத்தும் முயற்சிக்கு மக்களின் ஆதரவு திருப்திகரமாக இல்லை என்றார்.

“மருந்துகளைப் பெறுவதில் தாமதம் கோவிட்-19 பயம் காரணமாக பெரும் கவலையாக உள்ளது,” என்று அவர் கூறினார்.

எனவே, இரண்டு நாட்களுக்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தால், கூடிய விரைவில் மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறு வலியுறுத்தினார்.

தவிர, தங்கள் சுற்றுப்புறத்தைச் சுற்றியுள்ள கொசுக்கள் பெருகும் இடங்களையும் அழிக்க நேரம் ஒதுக்குமாறு அழைப்பு விடுத்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மதுபோதையில் மயங்கியிருந்த சாரதியும், நடத்துனரும் பணி இடைநீக்கம்!

Pagetamil

யாழில் யூடியூப்பர் கைது

Pagetamil

தேசபந்து கைது செய்யப்படாமலிருப்பதன் பின்னணியில் அநுர அரசின் டீல்!

Pagetamil

சண்டித்தனத்தில் ஈடுபட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் கைது!

Pagetamil

பாராளுமன்றத்திலிருந்து விலகி பெண்ணுக்கு வழிவிடப் போகிறேன்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!