கைதான இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு!

Date:

அண்மையில் கைது செய்யப்பட்ட எல்லை தாண்டிய இந்திய மீனவர்களுக்கு 15 ம் திகதிவரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் இடம் பெற்ற விசாரணைகளை அடுத்தே பருத்தித்துறை நீதிமன்றம் இவ் உத்தரவை வழங்கியுள்ளது.

இம் மீனவர்கள் 23 பேர் சார்பிலும் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் சட்டத்தரணி லோ.குகதாஸ் ஆஜராகியிருந்தார்.

கைது செய்யப்பட்ட 23 மீனவர்களுக்கெதிராகவும் எல்லை தாண்டிய மீன் பிடியில் ஈடுபட்டமை, தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன் படுத்தக்கூடிய நிலையில் வைத்திருந்தமை, அனுமதி பத்திரமின்றி மீன்பிடியில் ஈடுபட்டமை போன்ற மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி எதிர்வரும் 15ஆம் திகதி வரை வழக்கை ஒத்திவைத்ததுள்ளார்.

இம் மீனவர்கள் வழக்கு விசாரணைகளுக்கு யாழ் இந்திய துணை தூதாக அதிகாரிகளும் சமூகமளித்திருந்தனர்.

இந்திய மீனவர்களுக்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டத்தரணி ஜோய் மகாதேவாவும் ஆஜராகியிருந்தார்.

spot_imgspot_img

More like this
Related

ரோஹித ராஜபக்ஷ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் ரோஹித ராஜபக்ஷ, இன்று (25)...

வெனிசுவேலாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

வெனிசுவேலாவின் தலைநகரான கராகஸில் சில வினாடிகள் இடைவெளியில் இரண்டு பெரிய நிலநடுக்கங்கள்...

திடீர் உடல்நலக் குறைவு காரணமாக பேருந்து விபத்துக்குள்ளானதில் பேருந்து ஓட்டுநர் உயிரிழந்தார்

கொழும்பிலிருந்து அம்பாறைக்கு சுமார் 50 பயணிகளை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்