எம்.ஜி.ஆர் முதல் நம்பியார் வரை: யாழ்ப்பாண எம்.ஜி.ஆர் ஆன ஒரு இரசிகனின் கதை!

Date:

யாழ்ப்பாண எம்.ஜி.ஆர் என அழைக்கப்பட்ட கோப்பாய் இராசையா சுந்தரலிங்கம் நேற்று (11) அதிகாலை காலமாகியிருந்தார்.

நேற்று மதியம் கோப்பாய் இந்து மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

கோப்பாய் தெற்கு மாதா கோவிலடியை சேர்ந்த இராசையா சுந்தரலிங்கம் (79) தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமசந்திரனின் தீவிர இரசிகனாவார்.

யாழ்ப்பாணத்தில் எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் திரையிடப்படும் சமயங்களில், அதை கொண்டாட்டமாக மாற்றிய இரசிகர்களில் அவரும் ஒருவர்.

எம்.ஜி.ஆர் இரசிகர் மன்றம் அமைத்து, அதன் மூலம், திரைப்படத்தின் முதல் காட்சிகளில் திரையரங்களிற்கு அருகில் தாகசாந்தி நிலையங்கள் அமைத்து நீராகாரம் வழங்கினார்.

அப்போது கொழும்பிலிருந்து வெளியாகும் தந்தி பத்திரிகையில் அது குறித்த செய்திகள் அடிக்கடி வெளியாகியிருந்தன. அந்த பத்திரிகை பிரதிகளுடன், கடல்வழியாக தமிழகம் சென்று, எம்.ஜி.ஆரை சந்தித்து பேசியுள்ளார். பத்திரிகை பிரதிகளையும் எம்.ஜி.ஆருக்கு காண்பித்தார்.

அப்போது இலங்கையில் உற்பத்தியாகம் சவர்க்காரம், பவுடர் என்பவற்றிற்கு தமிழகத்தில் கிராக்கியிருந்தது. தமிழகம் செல்லும் போது, அவற்றையும் எடுத்து சென்று எம்.ஜி.ஆருக்கு பரிசளித்தார்.

அவரது அன்பில் நெகிழ்ந்த எம்.ஜிஆர் தான் அணிந்திருந்த கண்ணாடியை கழற்றி அவருக்கு பரிசளித்தார். சுந்தரலிங்கம் காலமாகும் வரை அந்த கண்ணாடியை அணிந்து வந்தார்.

அத்துடன், நடிகர்கள் நம்பியார், கோபாலகிருஷ்ணன் ஆகியோரையும் சந்தித்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்.

எம்.ஜி.ஆரின் கழுத்தில் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டு காயத்தை பார்த்த போது

யாழ்ப்பாணம் கல்விங்காட்டில் எம்.ஜி.ஆர் சிலையொன்றை அமைத்து, வருடாந்தம் அவரது பிறந்த, மரணித்த நாட்களில் அஞ்சலி செலுத்தி வந்தார்.

நடிகர் நம்பியாருடன்

நடிகர் கோபால கிருஷ்ணனுடன்
spot_imgspot_img

More like this
Related

நான் அவனில்லை: பெண்களை ஏமாற்றும் இந்த ஆசாமியை கண்டால் பொலிசாருக்கு அறிவியுங்கள்!

கண்டி தெல்தெனிய மருத்துவமனை அருகே காரில் மர்மமான முறையில் உயிரிழந்த பிசியோதெரப்பிஸ்டின்...

சுரேஷ் சாலேவின் மனைவியின் நாடகம் தொடர்கிறது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியென்ற சந்தேகத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச்...

மட்டக்களப்பில் நெல் விலையை அதிகரிக்க கோரி விவசாயிகள் பாரிய ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் நெல் கொள்வனவு மற்றும் விலையை அதிகரிக்கக் கோரி இன்று செவ்வாய்க்கிழமை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்