தலைமை பொலிஸ் பரிசோதகர் காஞ்சன சமரகோன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாளை திறக்கப்படவுள்ள கம்பஹா – நால்ல பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் வரலாற்றில் இரண்டாவது முறையாக, பொலிஸ் நிலையமொன்றின் பொறுப்பதிகாரியாக பெண் அதிகாரி நியமிக்கப்படவுள்ளார்.
1997ஆம் ஆண்டு, யக்கலமுல்ல பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக தலைமை பொலிஸ் பரிசோதகர் பத்மினி நியமிக்கப்பட்டிருந்தார். 24 வருடங்களின் பின், இன்னொரு பெண் அதிகாரி பொலிஸ் நிலையமொன்றின் பொறுப்பதிகாரியாக செயற்படவுள்ளார்.
கேகாலையை சேர்ந்த காஞ்சனா சமரகோன் 1997 ஆம் ஆண்டு இலங்கை பொலிஸில் மகளிர் உப பொலிஸ் பரிசோதகராக இணைந்து கொண்டதுடன், சிலாபம், வவுனியா, கம்பஹா, மீரிகம, நிட்டம்புவ மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு உட்பட பல பிரிவுகளில் கடமையாற்றியுள்ளார்.
அவரது கணவரும் இலங்கை பொலிஸின் அமைச்சர் பாதுகாப்புப் பிரிவில் பணிபுரியும் தலைமைப் பரிசோதகர் ஆவார்.



