31.1 C
Jaffna
April 14, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

இன்று 21ஆம் திகதி: வாருங்கள் என்கிறது அரசு; வேண்டாமென்கிறார்கள் ஆசிரியர்கள்!

200 மாணவர்களை விட குறைந்த மாணவர்களை கொண்ட பாடசாலைகளை இன்று (21) திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எனினும், இன்று மாணவர்களை அனுப்ப வேண்டாமென ஆசிரியர் சங்கங்கள் கோரியுள்ளன.

கொரோனா பரவலால் நீண்டகாலம் மூடப்பட்டிருந்த பாடசாலைகளை கட்டம் கட்டமாக மீளத் திறக்கும் திட்டத்தின் கீழ், 200 ஐ விட குறைந்த மாணவர்களை கொண்ட பாடசாலைகளை இன்று ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சம்பள முரண்பாடு சிக்கலை தீர்க்க நீண்டகாலமாக போராடி வரும் ஆசிரியர்கள், தமது போராட்டத்தில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்து, கற்பித்தலிற்கு திரும்பவுள்ளனர்.  எனினும், அவர்கள் 25ஆம் திகதி முதலே கற்பித்தலை ஆரம்பிக்கவுள்ளனர்.

இன்று, பாடசாலைகளுக்குச் சென்று கற்பித்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆசிரியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க ஜனாதிபதியும் பிரதமரும் உயர்ந்தபட்ச நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆயினும், 23ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கையை ஆரம்பிக்கும் முடிவில் அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் உறுதியாக உள்ளன. இன்று மாணவர்களை பாடசாலைகளிற்கு அனுப்ப வேண்டாமென அவர்கள் கேட்டுள்ளனர்.

காய்ச்சல், தடிமன், சளி போன்ற அடையாளங்கள் காணப்படும் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என்று கல்வி அமைச்சு, பெற்றோரிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதையும் படியுங்கள்

பிள்ளையான் மீது பாய்ந்தது பயங்கரவாத தடைச்சட்டம்: 90 நாட்கள் தடுப்புக்காவல்!

Pagetamil

இனி அமெரிக்காவின் இடத்தை நாம் தீர்மானிக்க வேண்டும்!

Pagetamil

யாழ், கிளி, மன்னாரில் சங்கு அணியின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

ஏட்டிக்குப் போட்டியாக வரி விதிப்பு: தீவிரமடையும் அமெரிக்க- சீன வர்த்தகப் போர்!

Pagetamil

பிள்ளையான் கைது!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!