நாட்டாமை தீர்ப்பிற்கு மறுபேச்சா?: பிரதேசசபை உறுப்பினரால் தாக்கப்பட்டவர் வைத்தியசாலையில்!

Date:

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினரின் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த நிலையில் ஒருவர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி சம்பவமானது இன்று பிற்பகல் ஆறு மணியளவில் களுவாஞ்சிகுடி மக்கள் வங்கி வீதியில் இடம் பெற்றுள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது.

களுவாஞ்சிக்குடியில் இண்டு காணி உரிமையாளருக்கிடையில் ஒழுங்கை சம்பந்தமான பிரச்சினை இடம் பெற்ற நிலையில் குறித்த பிரதேச சபை உறுப்பினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.

பிரச்சனையை கேட்டுவிட்டு, தனது தீர்ப்பை அந்த பிரதேசசபை உறுப்பினர் வழங்கியுள்ளார். அதை ஏற்க மறுத்த போது, பிரச்சனையுடன் தொடர்புடைய மறுதரப்பினருன் இணைந்து தன்னை தாக்கியதாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

யாழ் போதனா வைத்தியசாலை தீ விபத்து; பெருமளவு மருந்துகள் அழிவு… மின் ஒழுக்கு காரணம்?: யாழில் தீயணைப்பு வசதி இல்லாததை வெளிச்சமிட்ட சம்பவம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏற்பட்ட...

தவெகவுக்கு விசிக ஆதரவு அளிக்க 2 காரணங்கள்… – திருமாவளவன் விவரிப்பு

தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சி வரக்...

விஜய் ஆட்சி அமைக்க ஐயூஎம்எல் ஆதரவு – தவெக பலம் 120 ஆக உயர்வு

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க விசிகவை தொடர்ந்து, ஐயூஎம்எல் கட்சியும் தனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்