30.7 C
Jaffna
March 29, 2024
குற்றம்

விமான நிலையத்தில் 100 போதை மாத்திரைகளுடன் கைதான பெண்: எங்கு மறைத்து வைத்திருந்தார் தெரியுமா?

உகாண்டாவிலிருந்து கத்தார் வழியாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த உகாண்டா பெண்ணின் வயிற்றில் கொக்கெயின் போதைப்பொருள் மாத்திரைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் பிரிவு இன்று (15) கண்டுபிடித்தது.

உகண்டா நாட்டை சேர்ந்த 45 வயதான பெண் ஒருவர் சுங்க அதிகாரிகளினால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வயிற்றில் 100 போதை மாத்திரைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

உகண்டாவில் இருந்து தோஹா ஊடாக கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR 664 இலக்க விமானத்தில் இன்று காலை 9.00 மணி அளவில் குறித்த பெண் இலங்கை வந்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வௌியேறும் பகுதியில் அவரை ஸ்கான் இயந்திரம் மூலம் சோதனையிட்ட போது இந்த கொக்கெய்ன் மாத்திரைகள் அவரின் வயிற்றில் மறைத்து வைத்து கொண்டு வரப்பட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பின்னர், தனது வயிற்றில் 100 உருண்டைகள் உள்ளதாக அவர் தெரிவித்திருந்த நிலையில் இதுவரை 51 உருண்டைகள் அகற்றப்பட்டுள்ளன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விபச்சார விடுதியில் சிக்கிய 2 பெண்களுக்கு எயிட்ஸ்!

Pagetamil

மனைவியின் 15 வயது தங்கையுடன் குடும்பம் நடத்தி கர்ப்பமாக்கியவர் கைது!

Pagetamil

காதலன் பலியான 15வது நாளில் உயிர்விட்ட காதலி: உடல் பாகங்கள் தானம்!

Pagetamil

பேஸ்புக்கை ஹக் செய்து யுவதியின் நிர்வாண படம் கேட்டு மிரட்டிய இளைஞன்: சொக்லேற் வாங்கி வந்தபோது சிக்கினார்!

Pagetamil

2வது முறை சிக்கிய 19, 21 வயது யுவதிகளுக்கு விளக்கமறியல்

Pagetamil

Leave a Comment