உகாண்டாவிலிருந்து கத்தார் வழியாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த உகாண்டா பெண்ணின் வயிற்றில் கொக்கெயின் போதைப்பொருள் மாத்திரைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் பிரிவு இன்று (15) கண்டுபிடித்தது.
உகண்டா நாட்டை சேர்ந்த 45 வயதான பெண் ஒருவர் சுங்க அதிகாரிகளினால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வயிற்றில் 100 போதை மாத்திரைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
உகண்டாவில் இருந்து தோஹா ஊடாக கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR 664 இலக்க விமானத்தில் இன்று காலை 9.00 மணி அளவில் குறித்த பெண் இலங்கை வந்துள்ளார்.
பின்னர், தனது வயிற்றில் 100 உருண்டைகள் உள்ளதாக அவர் தெரிவித்திருந்த நிலையில் இதுவரை 51 உருண்டைகள் அகற்றப்பட்டுள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1