Pagetamil
கிழக்கு

கார் விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் மரணம்!

கந்தளாய் பிரதேசத்தில் கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து புகையிரத கடவையில் மோதியதில் காரில் பயணித்த பொலிஸ் எஸ் ஐ ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய எஸ்ஐ படுகாயமடைந்த நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்றிரவு (11) 10.30 இடம் பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் கந்தளாய் தலைமையக பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் நெலுவ-எல்லகாவ வந்த பகுதியைச் சேர்ந்த (எஸ்.ஐ) டி.எல்.சிறிசேன (58) எனவும் படுகாயமடைந்தவர் அதே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மாத்தளை-மஹாவெல பகுதியைச் சேர்ந்த (எஸ்.ஐ டி.எம்.டி.பீ. திசாநாயக்க (55) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் கந்தளாய் தலைமையக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விபத்தில் ஒருவர் பலி

Pagetamil

தூக்கில் தொங்கிய சடலம் அடையாளம் காணப்பட்டது!

Pagetamil

கல்முனை மாநகர சபைக்கு எதிராக மக்கள் போராட்டம்

Pagetamil

சம்மாந்துறையில் எரிபொருளுக்கு வரிசை

Pagetamil

கொம்மாதுறையில் யானைத்தாக்குதலில் ஆசிரியர் வீடு பெரும் சேதம்

Pagetamil

Leave a Comment