நாட்டில் இதுவரை பதிவான கோவிட் -19 தொடர்பான காரணங்களால் உயிரிழந்தவர்களில் 74 வீதமானவர்கள், கொரோனா வைரஸிற்கு எதிராக ஒரு தடுப்பூசி மருந்தையும் பெறாத நபர்கள் என்று சுகாதாரப் பிரிவுகள் கூறுகின்றன.
சுகாதார அமைச்சகத்தில் கோவிட் -19 இன் தலைமை ஒருங்கிணைப்பாளர், மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் இயக்குனர் வைத்தியர் அன்வர் ஹம்தானி. உயிரிழந்தவர்களில் 26% பேர் மட்டுமே தடுப்பூசி பெற்றதாக கூறினார்.
அவர்களில் 20% பேர் ஒரு தடுப்பூசியை மட்டுமே பெற்றனர். 6% மட்டுமே கோவிட் -19க்கு எதிரான இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றனர் என்று ஹம்தானி குறிப்பிட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1