Pagetamil
இந்தியா

தாம்பரம் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி குத்திக்கொலை: இன்னொரு நுங்கம்பாக்கம் சம்பவம்!

தாம்பரம் ரயில் நிலைய வாயில் அருகே கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தினார். காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை தாம்பரம் ரயில் நிலைய வாயிலில் இன்று கல்லூரிக்கு செல்வதற்காக வந்த மாணவி ஸ்வேதா என்பவர் வந்துள்ளார். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் மாணவியை கத்தியால் கழுத்து, மார்பு, வயிறு ஆகிய பகுதிகளில் பலமாக குத்தியுள்ளார்.

இதனால் மாணவி நிலைதடுமாறி விழவே, வாலிபரும் தனது கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். பின்னர் அங்கு வந்த போலீசார் இருவரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.

படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த மாணவி ஸ்வேதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியை இளைஞர் கொலை செய்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இதேபோல கடந்த 2016 ஜூன் மாதம் ஐ.டி. பெண் ஊழியர் சுவாதி (24) என்பவர் பயணிகள் கண்முன்னே இளைஞரால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மணமகள் ‘லெஹங்கா’ அணியாததால் கத்திச்சண்டை போட்ட சம்பந்திகள்

Pagetamil

தங்கம் கடத்திய நடிகை கைது!

Pagetamil

கவிஞர் நந்தலாலா காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

Pagetamil

விஜயலட்சுமியுடன் சமரசம் செய்ய அவகாசம்: சீமான் மீதான பாலியல் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

Pagetamil

தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி தொடர் உணவுத்தவிர்ப்பு போராட்டம்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!