ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.
பம்பலப்பிட்டி பகுதியில் இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தாக்கிய விவகாரத்தில் அவர் கைதானார்.
ஹம்பாந்தோட்டை மேயர் இன்று காலை பம்பலப்பிட்டி பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்னாண்டோ பம்பலப்பிட்டியில் உள்ள கொத்தலாவல அவென்யூவில் உள்ள தனியார் நிலத்திற்குள் நுழைந்து பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவரை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்னாண்டோ போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.




