28.7 C
Jaffna
April 12, 2025
Pagetamil
இலங்கை

முல்லைத்தீவை சேர்ந்த அரசியல் கைதி 8 ஆண்டுகளின் பின்னர் விடுதலை!

முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த அரசியல் கைதியான நடராசா குகநாதன் கொழும்பு மேல்நீதிமன்றத்தினால் (16) இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, உடையார்கட்டினை சேர்ந்த நடேசு குகநாதன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து 2009.05.19 ஆம் திகதி படையினரால் கைதுசெய்யப்பட்டார்.

மூன்று ஆண்டுகள் தடுத்துவைக்கப்பட்டு பின்னர் உயர்நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் 2012.03.24 அன்று தொடக்கம் ஒரு ஆண்டு புனர்வாழ்வு பெற்று 2013.03.23 அன்று விடுதலை செய்யப்பட்டார்.

குடும்பத்துடன் வாழ்ந்து வந்த நிலையில் 2013.07.09 ஆம் திகதி அன்று தொலைபேசிமூலம் விசாரணைக்காக பயங்கரவாத விசாரணை பிரிவால் அழைத்து மீண்டும் கைதுசெய்து பூசா சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டு பின்னர் 2015ஆம் ஆண்டு நியூமகசின் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு கடந்த 8 ஆண்டுகளாக தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.

இன்னிலையில் கடந்த 8 ஆண்டுகள் தடுத்துவைக்கப்பட்ட நிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்கு அமைவாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (16) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

வடக்கு அரச உத்தியோகத்தர்களின் கவனத்துக்கு: அலுவலகம் போகும்போது இடைநடுவில் நிற்கும் அபாயத்தை தவிர்க்க!

Pagetamil

நல்லூர் கந்தன் வடக்கு நுழைவாயில் வீதி வளைவுக்கு அடிக்கல்

Pagetamil

ஆற்றங்கரையோரம் ஒய்யாரமாக தூங்கும் யானைகள்

Pagetamil

பலாலி- வசாவிளான் வீதி கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டதால் நாமலுக்கு வந்த கவலை!

Pagetamil

‘எங்கள் ஆட்கள் யாராவது இராணுவத்துடன் சேர்ந்து இயங்கியதை நிரூபிக்க முடியுமா?’: கருணா விடும் புது ‘கப்சா’!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!