அநுராதபுரத்தில் மிரட்டப்பட்ட தமிழ் அரசியல்கைதிகளை பார்வையிட த.தே.த.முன்னணிக்கு அனுமதி மறுப்பு!

Date:

அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்காக, இன்று (16) காலை சட்டத்தரணிகள் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் சென்ற நிலையில், அவர்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது

அநுராரபுர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் கடந்த 12ஆம் திகதியன்று சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சரினால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, முழந்தாளிட வைக்கப்பட்டது.

அவர்களை பார்வையிட இன்று காலை அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் சென்றனர்.

‘கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில் அனுமதிக்க முடியாது என்றும் அவ்வாறு அனுமதிப்பதாக இருந்தால் கொழும்பில் இருக்கும் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சிடம் அனுமதி பெற்று, தங்களுக்கு அறிவித்தல் கிடைத்தால் மாத்திரமே அனுமதிப்கோம் என, சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்’ என, பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்

இதையடுத்து, இராஜாயங்க அமைச்சின் செயலாளாருக்கு தொடர்பை ஏற்படுத்தியும் எந்த பதிலும் இல்லாத நிலையில், சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை சந்திக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

‘தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட எங்களிடம் தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்கள் சிறையில் உள்ள அவர்களின் நலன்களை பார்ப்பதற்கு சட்டத்தரணி என்றவகையிலும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும் எங்களை ஈடுபடுத்த சொல்லி கேட்டுள்ளார்கள்.

‘இதில் இருந்து தமிழ் அரசியல் கைதிகளின் நீதி நியாயம் எந்த அளவுக்கு இருக்கின்றது என்பதை விளங்கிக்கொள்ளக் கூடியதாக இருக்கும். நாங்கள் தொடர்ந்தும் முயற்சிகளை எடுப்போம்’ என்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எண்ணெய் உற்பத்தியை குறைத்த ஈரான்

அமெரிக்காவின் ஹோர்முஸ் ஜலசந்தி முற்றுகையால் ஏற்பட்ட அதிகரித்து வரும் சேமிப்பு நெருக்கடியைச்...

கிளிநொச்சியில் பிளாஸ்டிக் துப்பாக்கியுடன் மே தினத்திற்கு வந்தவர் கைது!

மே 1 அன்று கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகே நடைபெற்ற மே...

மனவைி விவகாரத்து கோரியதனால்  கோபத்தில்  தென்னைகளை வெட்டி வீழ்த்திய கணவன்

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் மூன்று பெண் பிள்ளைகளின் தாயான பெண்ஒருவர் தனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்