ஒரே நாளில் கொல்லப்பட்ட 1,400 டொல்ஃபின்கள்

Date:

ஃபாரோ தீவுகளில், ஒரே நாளில் 1,400க்கும் மேற்பட்ட டொல்ஃபின்கள் கொல்லப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.

டொல்ஃபின்களை வேட்டையாடும் பாரம்பரியம் அங்கு பல நூறு ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வந்தாலும், ஒரே நாளில் அத்தனை டொல்ஃபின்கள் இதுவரை கொல்லப்பட்டதில்லை.

படகுகளால் Skalabotnur கடற்கரையின் தாழ்வான பகுதிக்குத் துரத்தப்பட்ட டொல்ஃபின்கள், பின்னர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டன.

அவற்றின் இரத்தம், தண்ணீரைச் செந்நீராக்கியது.

கொல்லப்பட்ட டொல்ஃபின்கள் உள்ளூர்வாசிகளின் பயன்பாட்டுக்காக விநியோகிக்கப்பட்டன.

ஆண்டுதோறும், சராசரியாக 600 திமிங்கிலங்களுக்கும் குறைந்த அளவு டொல்ஃபின்களே பிடிக்கப்படுவதாக ஃபாரோ அரசாங்கம் கூறியது.

அந்த வழக்கம், தங்கள் கலாசார அடையாளம் என்றும், நீடித்து நிலைத்திருக்கும் வகையில் உணவு பெற அது உதவுவதாகவும் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

எனினும், அது தேவையற்ற வழக்கம் என்றும் கொடூரமான செயல் என்றும் விலங்குநல ஆர்வலர்கள் குறைகூறுகின்றனர்.

இதற்கிடையே, இம்முறை 1,400க்கும் மேற்பட்ட டொல்ஃபின்கள் கொல்லப்பட்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆனால், உள்ளூர் அதிகாரிகளின் ஒப்புதல் பெறப்பட்டதாகவும் சட்டங்கள் மீறப்படவில்லை வேட்டையாடுபவர்கள் கூறுகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

மாமாங்கேஸ்வரர் ஆலய “தேர்” திருவிழா விண்ணைப் பிளந்த பல்லாயிரக்கணக்கானபக்தர்களின் அரோகரா கோஷம்

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலமான மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின்...

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான தீர்மானத்துக்கு வரவேண்டும்! – இம்ரான் எம்.பி

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான தீர்மானம் ஒன்றுக்கு வரவேண்டும்...

இன்றைய ராசி பலன் | 11.08.2026

## 🔮 இன்றைய ராசி பலன் | 11.08.2026 ♈ மேஷம்: புதிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்