2 நாட்களாக ரூம் போட்டு பெண்ணை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

Date:

கொழும்பு பிலியந்தலையிலுள்ள விடுதியொன்றில் இரண்டு நாட்களாக ஒரு பெண்ணை அடைத்து வைத்து கொடூரமாக தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற கடமையில் இணைக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரே கைது செய்யப்பட்டுள்ளார்.

அப்பகுதியில் வசிப்பவர்கள் 119 அவசர இலக்கத்திற்கு அளித்த முறைப்பாட்டையடுத்து, பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காயமடைந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொலிஸ் உத்தியோகத்தர் திருமணமாகாதவர். தாக்கப்பட்ட பெண் திருமணமானவர். ஆண் என்றும் பொலிசார் தெரிவித்தனர்.

இருவரும் அறிமுகமான பின்னர் பொலிஸ் உத்தியோகத்தர் பிலியந்தல பகுதியில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து அந்த பெண்ணுடன் தங்கியிருந்துள்ளார்.

சந்தேகநபர் அந்த பெண்ணுடன் இரண்டு நாட்கள் தங்கியிருந்துள்ளார். அந்த பெண்ணை கழிப்பறைக்கு செல்லவும் அனுமதிக்கவில்லையென்றும், கடுமையாக தாக்கப்பட்ட பெண்ணின் மூக்கு மற்றும் உடலின் பல பாகங்களில் பலத்த காயமடைந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

“எங்கள் நிலங்கள் எங்களுடையதுதானே?” – 11ஆவது வாரமாகவும் பலாலி மக்களின் போராட்டம்!

“எங்கள் நிலங்கள் எங்களுடையதுதானே… அது எப்படி உங்களுடையதாகும்?” – 11ஆவது வாரமாகவும்...

மதுபோதையில் வீட்டுக்குள் புகுந்து சேதம்; நெல்லியடியில் பிரதேச சபை உறுப்பினர் கைது

நெல்லியடி நகரில் உள்ள இளைப்பாறிய அரச உத்தியோகத்தரின் வீட்டிற்குள் மதுபோதையில் அத்து...

நிந்தவூர் றிஸாலா இஸ்லாமியக் கல்லூரியில் “மறை போற்றும் மாநபியின் புகழோங்கும் விழா

நிந்தவூர் றிஸாலா இஸ்லாமியக் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “மறை போற்றும் மாநபியின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்