நாடளாவிய ரீதியில் விதிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு செப்டம்பர் 21 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கோவிட் -19 தொடர்பான ஜனாதிபதி செயலணியின் முடிவின் படி, தனிமைப்படுத்தல் ஊரடங்கு செப்டம்பர் 21 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நீட்டிக்கப்படும்.
இந்த பணிக்குழு இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கூடியபோது இந்த முடிவெடுக்கப்பட்டது.
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ட்விட்டரில், கொரோனா வைரஸ் தொற்றுக்கள் படிப்படியாக குறைந்து வருவதால், நாடு ஆபத்து இல்லாமல் மீண்டும் திறக்க முடியும் என்று அரசாங்கம் நம்புகிறது எனவும், தனிமைப்படுத்தல் விதிமுறைகளை கடைபிடிக்கவும், தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்யவும் அமைச்சர் பொதுமக்களை வலியுறுத்தினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1