யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரியை சேர்ந்த 26 வயதான ஞானப்பிரகாசம் பிரகாஷ் என்பவரே உயிரிழந்தார். அவர் சுயாதீன ஊடகவியலாளராக செயற்பட்டு வந்தார்.
மாற்று திறனாளியான அவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதியானது.
வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மாரை திடீரென சுவாசச் சிரமம் ஏற்பட்ட நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையில் போராடி வந்த இளம் ஊடகவியலாளரின் இறப்பிற்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
கொரோனா தொற்று உறுதியான பின்னர் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த இறுதி செய்தி இது-





