கணவர்களால் தாக்கப்பட்ட 30 மனைவிகள் ஒரே வைத்தியசாலையில்!

Date:

ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ள கடந்த 10 நாட்களில் (ஓகஸ்ட் 21 முதல் ஓகஸ்ட் 31 வரை) குடிபோதையில் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக காயமடைந்த 150 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் 30 மனைவிகள் தங்கள் கணவர்களால் தாக்கப்பட்டனர் என்று அவர் கூறினார்.

ஏனையவர்கள் அயலிலுள்ளவர்களுடனான தகராற்றினால் காயமடைந்த ஆண்களாவர்.

மேலும், கடந்த 10 நாட்களில் வீட்டில் விழுந்து, தீக்காயம் அடைந்த சுமார் 100 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைவரும் 23 முதல் 70 வயதுக்குட்பட்டவர்கள். கொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வசிப்பவர்கள் என்று அவர் மேலும் கூறினார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

அரச நிதி மோசடிச் சம்பவம் ஹக்கிங் அல்ல; போல ஆவணங்கள் மூலமான திருட்டு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ,...

திருமண ஆசைகாட்டி தொழிலதிபரிடம ரூ.9 கோடி மோசடி: பிரபல நடிகை மீது வழக்கு!

திருமண ஆசை காட்​டி, ரூ.9.35 கோடி மோசடி செய்​த​தாக தெலுங்கு நடிகை...

ரிஷாட் வழக்கிலிருந்து நீதிபதி விலகல்

வில்பத்து விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்