Pagetamil
இலங்கை

வவுனியாவில் மரணித்தவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெறாதவர்கள்!

வவுனியாவில் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் முழுமையாக பெறாதவர்களே இதுவரை மரணமடைந்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் எம்.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தில் இன்று (28) இடம்பெற்ற கோவிட் நிலமை தொடர்பான அவசர கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வவுனியாவில் கடந்த புதன்கிழமை வரை கோவிட் காரணமாக 49 பேர் மரணமடைந்துள்ளனர். மரணமடைந்தவர்களில் 90 வீதத்திற்கும் அதிகமானவர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்களாவர். இவ்வாறு மரணமடைந்த 49 பேரில் 37 பேர் எந்தவிதமான தடுப்பூசிகளையும் பெற்றுக் கொள்ளாதவர்கள் ஆவர். 12 பேர் சினோபாம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் மட்டும் பெற்றுக் கொண்டவர்களாவர். தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்சுகளையும் பெற்றுக் கொண்ட எவரும் இதுவரை வவுனியாவில் மரணமாகவில்லை. தடுப்பூசிகளை முழுமையாக பெறுவதன் மூலம் மட்டுமே இறப்புக்களைக் கட்டுப்படுத்த முடியும். இதனால் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அனைவரும் தாமாக முன் வந்து தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சிறுமியை போலி அடையாளத்தில் வெளிநாடு அனுப்பிய முகவருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

Pagetamil

மாணவிகளுடன் சேர்ந்து மாணவர்களை தாக்கிய ஆசிரியர்

Pagetamil

மதுபோதையில் மயங்கியிருந்த சாரதியும், நடத்துனரும் பணி இடைநீக்கம்!

Pagetamil

யாழில் யூடியூப்பர் கைது

Pagetamil

தேசபந்து கைது செய்யப்படாமலிருப்பதன் பின்னணியில் அநுர அரசின் டீல்!

Pagetamil

Leave a Comment