60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஐந்து நாட்களும் தடுப்பூசி: கிளிநொச்சி வைத்தியசாலை பணிப்பாளர்!

Date:

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வாரத்தின் ஐந்து நாட்களும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துப்படும் என கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைப் பணிப்பாளர் எஸ்.சுகந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

60 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதலாவது அல்லது இரண்டாவது தடுப்பூசியினை கிளிநொச்சி மாவட்டவைத்தியசாலையில் வார நாட்களில் காலை எட்டு மணி முதல் 12 வரை செலுத்திக்கொள்ள முடியும். அத்தோடு வரும் வாரமளவில் இத் தடுப்பூசி
செலுத்தும் நடவடிக்கை 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும்
செலுத்தப்படவுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் கிளிநொச்சி மற்றும் அயல் மாவட்டங்களைச் சேர்ந்த கொரோனா மரணங்கள் 25 இடம்பெற்றுள்ளன. இதில் 14 பேர் எவ்வித தடுப்பூசியினையும் செலுத்திக்கொள்ளாதவர்கள். ஏழு பேர் ஒரு தடுப்பூசியினை மாத்திரம் செலுத்திக்கொண்டவர்கள் எனவும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

போக்குவரத்து விதிகளை மீறி ரிக்ரொக் வீடியோ: 3 யுவதிகள் கைது!

புத்தல-அம்பகொலவெவ வீதியில் தலைக்கவசம் அணியாமல், போக்குவரத்து விதிகளை மீறி மோட்டார் சைக்கிள்...

2 அணிகளாகப் பிரிந்தது அதிமுக: தற்காலிக பேரவைத் தலைவரிடம் பழனிசாமி, வேலுமணி தரப்பினர் தனித்தனியே கடிதம்

சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் யார் என்பதில் பொதுச் செயலாளர் பழனிசாமி...

பொலிசார் பௌத்தர்களென்பதால் தையிட்டி விகாராதிபதிக்கு பயந்து செயற்படுகிறார்கள்: எம்.ஏ.சுமந்திரன்

பொலிஸார் பௌத்தர்களாக இருப்பதனால் , பௌத்த பீடாதிபதிகளுக்கு பயந்து சட்டத்தை நடைமுறைப்படுத்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்