தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 24 மணிநேர காலப்பகுதியில் 626 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, கடந்த ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரை 59,621 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மேற்கு மாகாணத்திற்கு நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 13 வீதித் தடுப்புகளில் நேற்று 609 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.



