நாடளாவிய ரீதியில் தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு செப்டம்பர் 6 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று மற்றும் இறப்புகள் அதிகரித்ததைத் தொடர்ந்து ஓகஸ்ட் 20 ஆம் திகதி நள்ளிரவில் நாடு முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வரும் திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதும், அது 6ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1