ரிஷாத் பதியுதீனின் மாமனாருக்கு கொரோனா தொற்று: பிணை கோரிக்கை நிராகரிப்பு!

Date:

சிறுமி ஹிஷாலினி உயிரிழந்த வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மாமனார் கோவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளானதால் அவரை பிணையில் விடுவிக்குமாறு சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனி அபேவிக்ரம இன்று (27) நிராகரித்தார்.

சந்தேக நபருக்கு கோவிட் தொற்று இருந்தால் அவருக்கு தேவையான சிகிச்சையை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சிறை கண்காணிப்பாளருக்கு நீதிவான் உத்தரவிட்டார்.

வழக்கின் இரண்டாவது சந்தேக நபரான அலி இப்ராகிம் சைபு கிதார் முகமது சிஹாப்தீன் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன முன்னிலையாக இந்த பிணை கோரிக்கையை சமர்ப்பித்தார்.

தனது வாடிக்கையாளருக்கு கோவிட் நோய்க்கு எதிரான இரண்டாவது தடுப்பூசி கிடைக்கவில்லை என்றும், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்.

சிறைச்சாலை கைதி ஒருவருக்கு கோவிட் தொற்று இருப்பதாக கூறி பிணை வழங்க முடியாது என்றும், அவருக்கு சிகிச்சை அளிக்க சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பிக்கலாம் என்றும் நீதிபதி கூறினார்.

பிணை மனுவை நிராகரித்த நீதிமன்றம், சந்தேக நபருக்கு தேவையான சிகிச்சை அளிக்க சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ரசிக வெறியால் வந்த வினை: தமிழக தேர்தலில் கள்ள வாக்கிட்ட இலங்கைத் தமிழர்கள் பலர் கைது!

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற்று முடிந்துள்​ளது. எப்​போதும் இல்​லாத வகை​யில் இந்​த​முறை...

யாழில் மின்னல் தாக்கி இளைஞன் பலி

யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் நேற்று (14) மின்னல் தாக்கி இளைஞர்...

உக்ரைனின் ட்ரோன்கள் அத்துமீறியதால் கவிழ்ந்த ஆட்சி: லாட்வியாவில் நடப்பது என்ன?

பால்டிக் நாடான லாட்வியாவிற்குள் அத்துமீறி நுழைந்த உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் தொடர்பான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்