ஊரடங்கு தொடருமா?: நாளை முடிவு!

Date:

தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீட்டிப்பதா இல்லையா என்பது குறித்த முடிவு வெள்ளிக்கிழமை (27) அறிவிக்கப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், வெள்ளிக்கிழமை நிலவரத்தை ஆராய்ந்த பின்னர் முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.

தேசிய கோவிட் தடுப்பு குழு வெள்ளிக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய தனிமைப்படுத்தல் ஊரடங்கு ஓகஸ்ட் 30 திங்கட்கிழமை அதிகாலை 04.00 மணி வரை அமலில் இருக்கும்.

முன்னதாக, கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த பயணக் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அரசாங்கத்தைக் கோரியிருந்தது.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி வந்தவர் 9 மாதங்களின் பின்னர் கைது

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி வந்தவர்...

மக்கள் வங்கிக்கொள்ளை: உதவி மேலாளர், பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது!

சமீபத்தில் ஹொரனவில் உள்ள ஒரு அரசு வங்கியில் இருந்து ரூ. 35...

அதிக மக்களை இணைக்கும் ஒரு புதிய அரசியல் இயக்கம்: அண்ணாமலை அறிவிப்பு

“அதிக மக்களை இணைக்கும் ஒரு புதிய அரசியல் இயக்கத்தை ஆரம்பிக்க வேண்டும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்