Pagetamil
இலங்கை

வங்கிகள் இன்று வரையறுக்கப்பட்ட சேவைகளை வழங்கும்!

வாடிக்கையாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட சேவைகளை வழங்க பல கிளைகள் இன்று திறந்திருக்கும் என்று பல முக்கிய வணிக வங்கிகள் அறிவித்துள்ளன.

சுகாதார அமைச்சின் உத்தரவின் படி, தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்ட போதிலும், பொது மக்களுக்கு வரையறுக்கப்பட்ட சேவைகளை வழங்க வங்கிகள் செயல்பட முடியும்.

அதன்படி, வர்த்தக நிதி, திறைசேரி செயல்பாடுகள், துப்புரவு நடவடிக்கைகள், சம்பளம் வழங்குதல் மற்றும் வாடிக்கையாளர்களின் பிற அவசர கோரிக்கைகளிற்காக வங்கிகள் இன்று திறக்கப்படும்.

தொடர்புடைய அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் வழிகாட்டுதல்களையும் கண்டிப்பாக கடைபிடிக்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தானியங்கி டெல்லர் இயந்திரங்கள், பண வைப்பு இயந்திரங்கள் மற்றும் மொபைல் வங்கி வாகனங்கள் உட்பட மின்னணு மற்றும் டிஜிட்டல் சனல்களின் பயன்பாட்டை எளிதாக்கவும் ஊக்குவிக்கவும் வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சிறுமியை போலி அடையாளத்தில் வெளிநாடு அனுப்பிய முகவருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

Pagetamil

மாணவிகளுடன் சேர்ந்து மாணவர்களை தாக்கிய ஆசிரியர்

Pagetamil

மதுபோதையில் மயங்கியிருந்த சாரதியும், நடத்துனரும் பணி இடைநீக்கம்!

Pagetamil

யாழில் யூடியூப்பர் கைது

Pagetamil

தேசபந்து கைது செய்யப்படாமலிருப்பதன் பின்னணியில் அநுர அரசின் டீல்!

Pagetamil

Leave a Comment