யாழ்ப்பாணத்தில் நேற்று (22) இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் குருநகரிலுள்ள திருச்சிலுவை சுகநல நிலையத்திற்கு அண்மையில் நேற்று வாள்வெட்டு சம்பவம் நடந்தது. குருநகரை நேர்ந்த இளைஞர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
குருநகருககும் அயலிலுள்ள இன்னொரு கிராம இளைஞர் குழுக்களிற்கிடையிலான “வரலாற்று பிரசித்தி பெற்ற“ மோதல் வரலாற்றின் தொடர்ச்சியாக இந்த வாள்வெட்டு நடந்ததா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.
இந்த சம்பவத்தில் 3 இளைஞர்கள் காயமடைந்ததாக முன்னர் செய்தி வெளியான போதும், 5 பேர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் இருவர் படுகாயமடைந்திருந்தனர். ஒருவர் உயிராபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அந்த இளைஞன் இன்று உயிரிழந்தார்.
குருநகரை சேர்ந்த ஜெரன் என அழைக்கப்படும் 24 வயதான இளைஞனே உயிரிழந்தார்.
அவர் வெட்டப்பட்ட இடத்தில் – வீதியில் பெருமளவு குருதி வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.